Durai Dted
Sunday, 22 October 2023
Sunday, 2 July 2023
Monday, 20 June 2022
வாழ்க்கையை அழகாக கொண்டு செல்ல....
1) எதற்கெடுத்தாலும் எல்லாத்துக்கும் கவலை படாதீங்க. காலையில அழுதா ஈவினிங் சிரிப்போம்.. துக்கமோ மகிழ்வோ எதுவோ அதிக நேரம் நம்ம உடல்நிலை எடுத்துக்காது. எல்லாம் கொஞ்ச நேரம். மீறி போனா அதை நீங்களே பிடிச்சு தொங்கறீங்கன்னு அர்த்தம்.
2) யதார்த்தம் பழகுங்க. அதான் முக்கியம். யார் வேணா கீழிருந்து மேலையும் மேலிருந்து கீழேயும் ஒரு நாளிலியே மாறிடுவாங்க. எனக்கா இந்த நிலைமைன்னு வாயடைச்சு போகாதீங்க. உங்களை விட அவமானபட்டவங்க எல்லாம் உலகத்துல இருக்காங்க.
3) எதையும் ஆழமாக நேசிக்காதீங்க. எதையும் ஆழமாக யோசிக்காதீங்க. ரொம்ப சிம்பிள் இது. நேசித்தலும் அதற்கான யோசித்தலும் தான் அழுகைக்கு அடிப்படை காரணம் என்ற தத்துவத்தை புரிஞ்சுக்கோங்க. சமநிலையா இருக்க கத்துக்குங்க.
4. ஒருத்தவங்க போயிட்டாங்கன்னா கெஞ்சாதீங்க. வேணும் வரை இருந்துட்டு திடீர்னு போறாங்கன்னா கஷ்டபட வேண்டியது அவங்க தான். நீங்க இல்ல. உதாசீன படுத்தினா உதறி விடுங்க. விலகி செல்பவர்களிடம் தானா போயிட்டு அன்பை கொட்டாதீங்க.. அதனால் வர அற்ப கவலைகளுக்கு எல்லாம் இடம் தராதீங்க.. அந்த நினைவுகள் மேலே எழும்பிச்சுன்னா ஒரே போடு போட்டு புதைச்சிடுங்க.
5) ஏமாற்றம் துரோகம் ரொம்ப சீரியஸா எடுத்துக்காதிங்க. Expectations lead to disappointment பிறப்பு இறப்பு போல துரோகமும் மனித வாழ்வில் ஓர் அங்கம். ஏமாற்றத்தை ஏற்றுக்கங்க. அப்பதான் அடுத்த முறை ஏமாற மாட்டீங்க. இழப்புகளை இயல்பாக்குங்க. அப்போதுதான் இழப்புகளை பற்றி கவலைபட மாட்டீங்க. அவ்வளவு எளிதில் எவரையும் நம்பிடாதீங்க. வாழ்க்கையில் இதான் முக்கியம்.
6. ஆறுதலா இருக்க உங்களை நீங்களே தயார்படுத்திக்கங்க. வேற யாரும் பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்து நிக்காதீங்க. உங்களுக்கு நீங்கதான் வேலைக்காரன் எஜமான் எல்லாமே.
Sunday, 10 April 2022
Subscribe to:
Posts (Atom)