

தமிழ்நாட்டில் முடியுடைய வேந்தர்களாக விளங்கிய மூவேந்தர்கள் சேரர், சோழர் ,பாண்டியருள்நடுநாயகமாய் விளங்கியவர்கள் சோழர்களே. அவர்களை சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர் , சங்க காலச் சோழர், பிற்காலச் சோழர் என்று மூன்று வகையினராக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பிரித்து உள்ளனர்.
சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர்கள்
சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர்கள் பற்றி கலிங்கத்துபரணி ,மூவருலா, மற்றும் திருவாலங்காடு செப்பேடுகளில் குறிப்புகள் உள்ளன. குறிப்பாக மனு, சிபி இவர்களின் சரித்திர செய்திகள் சங்க நூல்களில் உள்ளன.
இவர்களை தொடர்ந்து ககுத்தன், துந்துமாறன், முசுகுந்தன், வல்லபன், துஷ்யந்தன், பரதன், வீரசேனன், சித்ராசுரன், என்று மேலும் பலர் ஆண்ட இம்மண்ணில் கவேரன் என்பவன் காவிரியின் ஓட்டத்தை சோழ மண்ணிற்கு உருவாக்கி கொடுத்தவன்.
இவர்களுக்கு பின் புலிகேசி, சமுத்ரஜித் , வசு, பெருநற்கிள்ளி, மற்றும் இளஞ்சேட் சென்னி போன்றோர் ஆண்ட மண்ணில் இளஞ்சேட் சென்னியின் மகனாகிய கரிகாலனே வடக்கே இமயம் வரை சென்று வெற்றியுடன் வந்த முதல் தமிழரசன். இவனே சோழர் குலத்தின் பெருமை மிகு மன்னன். காவிரிக்கு கரைகண்டு சோழநாட்டை வளமை கொழிக்கும் நாடாக மாற்றியவன். இவன் காலம் கி. மு. 260 – 220 .
இவர்களுக்கு பின் புலிகேசி, சமுத்ரஜித் , வசு, பெருநற்கிள்ளி, மற்றும் இளஞ்சேட் சென்னி போன்றோர் ஆண்ட மண்ணில் இளஞ்சேட் சென்னியின் மகனாகிய கரிகாலனே வடக்கே இமயம் வரை சென்று வெற்றியுடன் வந்த முதல் தமிழரசன். இவனே சோழர் குலத்தின் பெருமை மிகு மன்னன். காவிரிக்கு கரைகண்டு சோழநாட்டை வளமை கொழிக்கும் நாடாக மாற்றியவன். இவன் காலம் கி. மு. 260 – 220 .
இவனை தொடர்ந்து கோச்செங்கணான், கிள்ளிவளவன், மணிமுடிசோழன், மற்றும் பலர் ஆண்டனர்.
சங்ககாலச் சோழர்கள்
இவர்களுள் கிள்ளிவளவன், கோப்பெரும் சோழன், நலங்கிள்ளி ,நெடுங்கிள்ளி, சோழன் செங்கணான், ஆகியோர் மிகவும் புகழ் பெற்ற மன்னர்களாக விளங்கினர். சங்ககால சோழர் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இருந்ததாக தெரிகிறது.
கடைச்சங்கத்தின் இறுதி காலம் முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகள் சோழர்களை பற்றி தெளிவான தகவல்கள் ஏதும் கிடையாது. குறிப்பாக கி.பி 250 முதல் கி.பி. 575 வரை உள்ள 300 ஆண்டுகளை தமிழ்நாட்டு வரலாற்றின் இருண்ட காலமாக குறிக்கின்றனர். அக்கால கட்டத்தில் வடநாட்டிலிருந்து வந்த களப்பிரர் என்ற கூட்டத்தினர் ஆட்சி செய்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றனஇக்காலகட்டத்தில் சோழர்கள் சிற்றரசர்களாகவும் , அரசியல் தலைவர்களாகவும் அடங்கி வாழ்ந்துள்ளனர். களப்பிரர்களை தொடர்ந்து பல்லவர்கள் சோழநாட்டை ஆண்டனர். சோழர்கள் களப்பிரர்களாலும் , பல்லவர்களாலும் வலிகுன்றி நின்றாலும் ,சிற்றரசர்களாகவும் , பழையாறையில் நிலையாகவும் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது.
கடைச்சங்கத்தின் இறுதி காலம் முதல் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ ஆறு நூற்றாண்டுகள் சோழர்களை பற்றி தெளிவான தகவல்கள் ஏதும் கிடையாது. குறிப்பாக கி.பி 250 முதல் கி.பி. 575 வரை உள்ள 300 ஆண்டுகளை தமிழ்நாட்டு வரலாற்றின் இருண்ட காலமாக குறிக்கின்றனர். அக்கால கட்டத்தில் வடநாட்டிலிருந்து வந்த களப்பிரர் என்ற கூட்டத்தினர் ஆட்சி செய்ததாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றனஇக்காலகட்டத்தில் சோழர்கள் சிற்றரசர்களாகவும் , அரசியல் தலைவர்களாகவும் அடங்கி வாழ்ந்துள்ளனர். களப்பிரர்களை தொடர்ந்து பல்லவர்கள் சோழநாட்டை ஆண்டனர். சோழர்கள் களப்பிரர்களாலும் , பல்லவர்களாலும் வலிகுன்றி நின்றாலும் ,சிற்றரசர்களாகவும் , பழையாறையில் நிலையாகவும் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது.
பிற்காலச் சோழர்கள்…
கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு தொண்டை மண்டலத்தைச் சிறப்புடன் ஆட்சி செய்த பல்லவப் பேரரசர்கள் , தெற்கேயுள்ள பாண்டி நாட்டையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தி இருந்தனர்.படை வலி மிகுந்த பல்லவப் பேரரசுக்கு வடக்கே இருந்த மேலைச் சாளுக்கியர் நிலைத்த பகைவர்களாக இருந்தனர்.எனவே கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாளுக்கியர் பல்லவர்களைப் பல முறை தாக்கி வெற்றி கண்டனர். அந்நேரத்தில் தெற்கில் காலம் கருதி அடங்கி இருந்த பாண்டியர்கள் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த சோழ நாட்டு எல்லையையும் ,கொங்குநாட்டு பகுதி ஆகிய இடங்களைக் கைப்பற்றி கொண்டனர்.இவ்வாறு வடக்கே சாளுக்கியரும்,தெற்கே பாண்டியரும் வலுப் பெற்றதால் இடையே உள்ள சோழ நாட்டில் பல்லவரின் ஆட்சி மிகவும் தளர்ச்சி அடைந்தது.
அப்போது பல்லவர்களுக்கு உட்பட்ட சிற்றரசர்களாய் தஞ்சை,வல்லம்,செந்தலை மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஊர்களை முத்தரையர் என்னும் மன்னர்கள் காத்து வந்தார்கள்.கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவர்கள் தளர்ச்சி அடைந்த நேரத்தில் முத்தரையரும் பல்லவரின் துணை வலியின்றி இருந்தனர்.
இந்நிலை பழையாறை நகரில் ஒடுங்கிக் கிடந்த சோழர்க்கு ஊக்கம் அளிப்பதாய் இருந்தது.இக்காலத்தில் தங்கள் பழைய ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த முதன் முதலில் துணிந்து வெளிவந்த சோழர் குலத் தோன்றல் ,பரகேசரி விசயாலயன் என்பவனாவான்.
அந்நேரத்தில் தஞ்சையை பெரும்பிடுகு முத்தரையன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.அவனை விசயாலயன் எளிதில் வென்று தஞ்சையைக் கைப்பற்றினான்.
பல்லவருடைய படைவலியும் ஆட்சியும் தளர்ந்த நேரத்தில் சோழர்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கியது.அது கி.பி 846 ஆகும்.இது 9 ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் ஆகும்
அப்போது பல்லவர்களுக்கு உட்பட்ட சிற்றரசர்களாய் தஞ்சை,வல்லம்,செந்தலை மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஊர்களை முத்தரையர் என்னும் மன்னர்கள் காத்து வந்தார்கள்.கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவர்கள் தளர்ச்சி அடைந்த நேரத்தில் முத்தரையரும் பல்லவரின் துணை வலியின்றி இருந்தனர்.
இந்நிலை பழையாறை நகரில் ஒடுங்கிக் கிடந்த சோழர்க்கு ஊக்கம் அளிப்பதாய் இருந்தது.இக்காலத்தில் தங்கள் பழைய ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த முதன் முதலில் துணிந்து வெளிவந்த சோழர் குலத் தோன்றல் ,பரகேசரி விசயாலயன் என்பவனாவான்.
அந்நேரத்தில் தஞ்சையை பெரும்பிடுகு முத்தரையன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.அவனை விசயாலயன் எளிதில் வென்று தஞ்சையைக் கைப்பற்றினான்.
பல்லவருடைய படைவலியும் ஆட்சியும் தளர்ந்த நேரத்தில் சோழர்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கியது.அது கி.பி 846 ஆகும்.இது 9 ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் ஆகும்
No comments:
Post a Comment