Tuesday, 29 November 2016

மனித நேயம்

அனாதையாய்ப் பிறந்து பார் ! 
தாய் தந்தையர் அருமை புரியும் ! 
அடிமையாய் இருந்து பார் ! 
சுதந்திரத்தின் சொர்க்கம் புரியும் ! 
கடுமையாய் உழைத்துப் பார் ! 
வெற்றியின் மகிமை புரியும் ! 
அட மனிதனே ! 
இன்னுமா புரியவில்லை ? 
மனித நேயத்தோடு வாழ்ந்து பார் ! 
மனிதப் பிறப்பின் மகத்துவம் புரியும் ! 
ஒரு முறையாவது மனித நேயத்துடன் 
வாழ்ந்து பார் !

No comments:

Post a Comment